விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

இந்திய அணியின் பயிற்சி ஆட்டம்: முதல் நாள் ஹைலைட்ஸ் விடியோ

விக்கெட் கீப்பர் பேட்டர் பரத் ஆட்டமிழக்காமல் 70 ரன்களும் உமேஷ் யாதவ் 23 ரன்களும் எடுத்து இந்திய அணிக்குக் கெளரவமான ஸ்கோரை வழங்கினார்கள்.

News image

ரோஹித் சர்மா - கோலி (கோப்புப் படம்)

Updated On :24 ஜூன் 2022, 12:06 pm IST

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட், ஜூலை 1 அன்று தொடங்குகிறது. 

டெஸ்டுக்கு முன்பு லீசெஸ்டர் நகரில் இந்தியா - லீசெஸ்டர்ஷைர் அணிகளுக்கு இடையிலான 4 நாள் பயிற்சி ஆட்டம் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. பயிற்சி ஆட்டம் என்பதால் இந்திய அணியைச் சேர்ந்த பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ரிஷப் பந்த், புஜாரா என நான்கு இந்திய வீரர்கள் லீசெஸ்டர்ஷைர் அணியில் இடம்பெற்றார்கள். 

இந்திய அணி பேட்டர் பலரும் அதிக ரன்கள் எடுக்காத நிலையில் விக்கெட் கீப்பர் பேட்டர் பரத் ஆட்டமிழக்காமல் 70 ரன்களும் உமேஷ் யாதவ் 23 ரன்களும் எடுத்து இந்திய அணிக்குக் கெளரவமான ஸ்கோரை வழங்கினார்கள். கோலி 33 ரன்களும் கேப்டன் ரோஹித் சர்மா 25 ரன்களும் எடுத்தார்கள். முதல் நாள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்துள்ளது. ரோமன் வாக்கர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.