கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மும்பைக்குப் பின்னடைவு: முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற ம.பி.

ரஞ்சி கோப்பை இறுதிச்சுற்றில் மும்பைக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றுள்ளது மத்தியப் பிரதேச அணி.

News image
Updated On :25 ஜூன் 2022, 5:34 am

DIN

ரஞ்சி கோப்பை இறுதிச்சுற்றில் மும்பைக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றுள்ளது மத்தியப் பிரதேச அணி.

பெங்களூரு எம். சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இறுதிச்சுற்றில் மும்பை - மத்தியப் பிரதேச அணிகள் மோதி வருகின்றன. 41 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி, 2016-17-க்குப் பிறகு ரஞ்சி கோப்பை இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 127.4 ஓவர்களில் 374 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜெயிஸ்வால் 78, சர்ஃபராஸ் கான் 134 ரன்கள் எடுத்தார்கள். 

3-ம் நாள் முடிவில் ம.பி. அணி 123 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 368 ரன்கள் எடுத்தது. ரஜத் படிதார் 67 ரன்களும் கேப்டன் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா 11 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

இந்நிலையில் இன்று கூடுதலாக 7 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றது ம.பி. அணி. ஆதித்யா ஸ்ரீவஸ்தவா 25, அக்‌ஷத் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்கள். 

142-வது ஓவரின் முடிவில் ம.பி. அணி 5 விக்கெட் இழப்புக்கு 424 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ரஜத் படிதார் 89, சஹானி 11 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். தற்போது ம.பி. அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் மீதமுள்ள நிலையில் 50 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. இதன்மூலம் ரஞ்சி கோப்பையை வெல்லும் கனவில் உள்ளது. 

கடைசி இரு நாள்களில் ஆட்டத்தில் திருப்பத்தை ஏற்படுத்தி மும்பை அணியால் கோப்பை வெல்ல முடியுமா? 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.