மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் ரஷியா பங்கேற்கத் தடை

கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் ரஷியா பங்கேற்கத் தடை விதித்துள்ளது ஃபிஃபா அமைப்பு.

News image
Updated On :19 நவம்பர் 2022, 6:12 am

DIN

கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் ரஷியா பங்கேற்கத் தடை விதித்துள்ளது ஃபிஃபா அமைப்பு.

2022 கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெறும் என ஃபிஃபா அமைப்பு 2010 டிசம்பரில் அறிவித்தது. நவம்பர் 21 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறுகிறது. லீக் சுற்றில் 12 நாள்களுக்குத் தினமும் நான்கு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. தோஹாவைச் சுற்றியுள்ள 8 மைதானங்கள் இப்போட்டிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஃபிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. ஃபிஃபா 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2018-ல் ரஷியாவில் முதல்முறையாக நடைபெற்றது. தரவரிசையில் 7-வது இடத்தில் இருந்த பிரான்ஸ் அணி உலகக் கோப்பையை வென்றது. குரோஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது. 2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பை அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா நாடுகள் பெற்றுள்ளன. இப்போட்டியில் 48 நாடுகள் பங்கேற்கின்றன.

உக்ரைன் மீது ரஷியா கடந்த வாரம் தாக்குதலைத் தொடங்கியது. ஏவுகணைகள், ராக்கெட் குண்டுகள், போா் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதுடன் ரஷிய தரைப் படையும் உக்ரைனுக்குள் ஊடுருவியது. இதுவரையிலான ஐந்து நாள் சண்டையில் உக்ரைனில் பொதுமக்கள் 102 போ் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கானோா் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா. மனித உரிமைகள் பிரிவு திங்கள்கிழமை தெரிவித்தது.

இந்நிலையில் உக்ரைன் மீது போரில் ஈடுபடும் ரஷியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நடவடிக்கை எடுத்துள்ளது ஃபிஃபா. 2022 கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் ரஷியா பங்கேற்கத் தடை விதித்துள்ளது. மேலும் சர்வதேசப் போட்டிகளில் ரஷிய அணி பங்கேற்கவும் ஃபிஃபா மற்றும் ஐரோப்பியக் கால்பந்து அமைப்பான யூஈஎஃப்ஏ ஆகிய இரு அமைப்புகளும் தடை விதித்துள்ளன.

இம்மாதம் உலகக் கோப்பைப் போட்டிக்கான தகுதிச்சுற்றுப் போட்டியின் அரையிறுதியில் போலந்துக்கு எதிராக ரஷிய அணி விளையாடவிருந்தது. ஜூலையில் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு ரஷிய மகளிர் அணி ஏற்கெனவே தகுதி பெற்றிருந்தது. ஃபிஃபாவின் இம்முடிவால் ரஷிய அணியால் இரு போட்டிகளிலும் பங்கேற்க முடியாது. மேலும் ஐரோப்பியப் போட்டிகளில் ரஷியக் கால்பந்து கிளப்புகளாலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.