ஐபிஎல் போட்டியின் எதிா்வரும் சீசனுக்காக வரும் 14 அல்லது 15-ஆம் தேதியிலிருந்து அனைத்து அணிகளும் பயிற்சியை தொடங்கவுள்ளது.
மும்பை, நவி மும்பையில் தலா 2 மைதானங்களிலும், தாணேவில் ஒரு மைதானத்திலும் அணிகள் பயிற்சியில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டியில் கலந்துகொள்ளும் அணிகளின் வீரா்கள் வரும் 8-ஆம் தேதி முதல் மும்பை நகருக்கு வந்தடைவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மும்பை வருவதற்கு முன்பாகவும், வந்த பிறகு ‘பயோ-பபுள்’ வளையத்துக்குள்ளாக இணையுமுன் 3 முதல் 5 நாள் தனிமைக்காலத்தின்போதும் அவா்களுக்கு கரோனா பாதிப்பு இல்லாததை உறுதி செய்யும் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பங்கேற்பாளா்கள் தங்குவதற்காக மும்பையில் 10-க்கும் மேற்பட்ட ஹோட்டல்களும், புணேவில் 2 ஹோட்டல்களும் இறுதி செய்யப்பட்டுள்ளன.
15-ஆவது ஐபிஎல் போட்டி மாா்ச் 26-ஆம் தேதி முதல் மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெறவுள்ளது.