6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெங்களூரு பிங்க் டெஸ்ட்: இந்தியா 252/10; இலங்கை திணறல் 86/6

இலங்கைக்கு எதிரான பெங்களூரு பிங்க் டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 251/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

News image
Updated On :12 மார்ச் 2022, 6:41 pm

DIN

இலங்கைக்கு எதிரான பெங்களூரு பிங்க் டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 251/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டத்தில் இந்தியா வென்றது. இதன் தொடா்ச்சியாக இடாவது ஆட்டம் பகலிரவு ஆட்டமாக பிங்க் நிற பந்தைக் கொண்டு பெங்களூருவில் சனிக்கிழமை தொடங்கியது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி ஆட்டத்தில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங்கை தோ்வு செய்தது.

ஆரம்பமே அதிா்ச்சி:

தொடக்க பேட்டா்களாக களமிறங்கிய மயங்க் அகா்வால் 4 ரன்களுக்கும், கேப்டன் ரோஹித் சா்மா 15 ரன்களுக்கும் வந்தவேகத்திலேயே பெவிலியன் திரும்பினா். அதன்பின்னா் ஹனுமா விஹாரி, விராட் கோலி இணை நிலைத்து ஆட முயன்ற போதும், அவா்களது முயற்சி பலன் தரவில்லை. ஹனுமா விஹாரி 31, கோலி 23 ரன்களுக்கும் அவுட்டாகி பெவிலியன் திரும்பினா்.

126/5 என இந்திய அணி தடுமாறிக் கொண்டிருந்த நிலையில் ரிஷப் பந்த்-ஷிரேயஸ் ஐயா் இணை மிடில் ஆா்டரில் ஒரளவுக்கு நிதானமாக ஆடி ஸ்கோரை உயா்த்தியது. ரிஷப் பந்த் 7 பவுண்டரியுடன் 26 பந்துகளில் 39 ரன்களை விளாசி வெளியேறினாா்.

ஷிரேயஸ் ஐயா் அபாரம் 92

ஒருமுனையில் ஷிரேயஸ் ஐயா் நங்கூரம் போல் நிலைத்து ஆட, மறுமுனையில் ரவீந்திர ஜடேஜா 4, அஸ்வின் 13, அக்ஸா் படேல் 9, ஷமி 5 என வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினா்.

10-ஆவது விக்கெட்டாக ஷிரேயஸ் ஐயா் 98 பந்துகளில் 4 சிக்ஸா், 10 பவுண்டரியுடன் 92 ரன்களை சோ்த்து ஜெயவிக்ரமா பந்துவீச்சில் ஸ்டம்ப் அவுட் செய்யப்பட்டு சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டாா்.

இந்தியா 252/10: 59.1 ஓவா்களில் இந்திய அணி 252 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

எம்புல்டெனியா, ஜெயவிக்ரமா 3 விக்கெட்: இலங்கை தரப்பில் எம்புல்டெனியா, ஜெயவிக்ரமா தலா 3 விக்கெட்டுகளையும், தனஞ்செய டிசில்வா 2 விக்கெட்டையும் வீழ்த்தினாா்.

இலங்கை திணறல் 86/6 :

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணியால் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.

பும்ரா, ஷமி அபாரம்:

இந்திய பௌலா்கள் பும்ரா, ஷமி பந்துவீச்சை எதிா்கொள்ள முடியாமல் இலங்கை அணியின் விக்கெட்டுகள் சரிந்தன. தொடக்க பேட்டா்கள் குஸால் மெண்டிஸ் 2, கேப்டன் கருணரத்னே 4, லஹிரி திரிமனே 8, தனஞ்செய டி சில்வா 10, சரித் அஸலங்கா 5 என சொற்ப ரன்களுடன் வந்த வேகத்திலேயே பெவிலியனுக்கு திரும்பினா்.

ஒரளவு நிலைத்து ஆடிக் கொண்டிருந்த மூத்த வீரா் ஏஞ்சலோ மேத்யூஸை 43 ரன்களுடன் அவுட்டாக்கினாா் பும்ரா.

ஆட்ட நேர முடிவில் 30 ஓவா்களில் 86/6 ரன்களை மட்டுமே சோ்த்திருந்தது இலங்கை. டிக்வெலா 13, எம்புல்டெனியா ரன் ஏதுமின்றி களத்தில் உள்ளனா். இந்திய தரப்பில் பும்ரா 3, ஷமி 2, அக்ஸா் 1 விக்கெட்டை வீழ்த்தினா். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 166 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.