உஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

 மீண்டது ஆர்ஜென்டீனா

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆர்ஜென்டீனா தனது 2-ஆவது ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் மெக்ஸிகோவை வீழ்த்தியது. 

Published On :6 பிப்ரவரி 2024, 6:20 pm IST

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆர்ஜென்டீனா தனது 2-ஆவது ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் மெக்ஸிகோவை வீழ்த்தியது. 

முதல் ஆட்டத்தில் சவூதி அரேபியாவிடம் தோற்று அதிர்ச்சியில் இருந்த ஆர்ஜென்டீனா, இந்த ஆட்டத்தில் வென்றதன் மூலம் நாக்அவுட் சுற்றுக்குத் தகுதிபெறுவதற்கான பந்தயத்தில் தன்னைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. முதல் ஆட்டத்தை டிரா செய்திருந்த மெக்ஸிகோ, தற்போது மேலும் பின்னடைவைச் சந்தித்தது. 

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதல் ஆட்டத்தின் தோல்வியிலிருந்து மீள்வதற்கான முனைப்புடன் ஆடியது ஆர்ஜென்டீனா. ஆனால், அந்த முயற்சிகளுக்கான பலனை அவ்வளவு எளிதாக மெக்ஸிகோ விட்டுத் தருவதாகத் தெரியவில்லை. மாறாக, 9-ஆவது நிமிஷத்தில் மெக்ஸிகோவுக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைக்க, அதை அந்த அணி வீணடித்தது. 

21-ஆவது நிமிஷத்தில் பந்தைத் தடுக்க முயன்றபோது ஆர்ஜென்டீன வீரர் அகுனாவை காலால் மிதித்ததற்காக மெக்ஸிகோ வீரர் அரெüஜோவுக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. பின்னர் 40-ஆவது நிமிஷத்தில் ஆர்ஜென்டீனாவுக்குக் கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை அந்த அணி வீணடித்தது. 43-ஆவது நிமிஷத்தில் மெக்ஸிகோ வீரர் குட்டெரெûஸ கீழே தள்ளியதற்காக ஆர்ஜென்டீனாவின் கொன்ஸôலோ மான்டியெலுக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. 

அதில் மெக்ஸிகோவுக்குக் கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை கோலாக விடாமல் அருமையாகத் தடுத்தார் ஆர்ஜென்டீனா கோல் கீப்பர் எமிலியானோ மார்டினெஸ். இவ்வாறாக முதல் பாதி ஆட்டம் கோலின்றி நிறைவடைந்தது. 2-ஆவது பாதியில் இரு அணிகளுக்குமே கிடைத்த மேலும் சில ஃப்ரீ கிக் வாய்ப்புகள் கோலாக மாறாமல் போயின. 

இறுதியாக, ஆட்டத்தின் முதல் கோலை மெஸ்ஸி 64-ஆவது நிமிஷத்தில் அடித்தார். ஏஞ்சல் டி மரியாவிடமிருந்து பாஸ் பெற்ற மெஸ்ஸி, கோல் போஸ்ட்டிலிருந்து 25 மீட்டர் தொலைவில் நின்றபடியே போஸ்டின் வலதுபக்க கீழ்பகுதிக்குள்ளாக பந்தை உதைத்து கோல்கீப்பர் பந்தை எட்ட முடியாதவ வகையில் கோலடித்து அசத்தினார். இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக, 87-ஆவது நிமிஷத்தில் ஆர்ஜென்டீனாவுக்கு 2-ஆவது கோல் வாய்ப்பும் கிடைத்தது. 

இறுதிவரை இந்த முன்னிலையை தக்கவைத்துக் கொண்ட ஆர்ஜென்டீனா கடைசியில் வெற்றி பெற்றது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.