வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மேற்கிந்தியத் தீவுகள் வீரருக்கு இடைக்காலத் தடை!

ஊக்கமருந்து தடுப்பு விதிமுறையை மீறிய மேற்கிந்தியத் தீவுகள் வீரருக்கு நான்கு ஆண்டுகள் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :8 அக்டோபர் 2022, 12:20 pm

DIN

ஊக்கமருந்து தடுப்பு விதிமுறையை மீறிய மேற்கிந்தியத் தீவுகள் வீரருக்கு நான்கு ஆண்டுகள் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மே.இ. தீவுகள் வீரர் ஜான் கேம்பல், 20 டெஸ்டுகள், 6 ஒருநாள், 2 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 3 அரை சதங்கள் எடுத்துள்ளார். கடைசியாகக் கடந்த ஜூன் மாதம் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்டில் விளையாடினார்.

இந்நிலையில் ஊக்கமருந்து தடுப்பு விதிமுறையை மீறிய குற்றத்துக்காக ஜான் கேம்பலுக்கு நான்கு ஆண்டு இடைக்காலத் தடை விதித்துள்ளது ஜமைக்கா ஊக்கமருந்துத் தடுப்பு ஆணையம். கடந்த ஏப்ரலில் கிங்ஸ்டனில் உள்ள தனது வீட்டில் ரத்த மாதிரிகளை வழங்க கேம்பல் மறுத்துள்ளார். இதையடுத்து அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.