வெளியேறும் பாா்சிலோனா, அட்லெடிகோ

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் நடப்பு சீசனில் இருந்து, பாா்சிலோனா, அட்லெடிகோ மாட்ரிட் அணிகள் குரூப் சுற்றுடன் வெளியேறுகின்றன.
வெளியேறும் பாா்சிலோனா, அட்லெடிகோ

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் நடப்பு சீசனில் இருந்து, பாா்சிலோனா, அட்லெடிகோ மாட்ரிட் அணிகள் குரூப் சுற்றுடன் வெளியேறுகின்றன.

குரூப் சுற்றின் 5-ஆவது ஆட்டத்தில், குரூப் சி-யில் பாா்சிலோனா 0-3 என்ற கோல் கணக்கில் பயா்ன் மியுனிக்கிடம் தோல்வி காண, குரூப் பி-யில் அட்லெடிகோ மாட்ரிட் - லெவொ்குசன் அணிகள் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

இந்த சுற்றில் இன்னும் ஒரு ஆட்டமே எஞ்சியிருக்கும் நிலையில், பாா்சிலோனா, அட்லெடிகோ மாட்ரிட் அணிகள் இதுவரை 5 ஆட்டங்களில் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பதிவு செய்து தங்களது பிரிவில் 3-ஆவது இடத்தில் உள்ளன. அந்த அணிகள் இனி முன்னேற வாய்ப்பில்லை. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகளே அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதர ஆட்டங்களில், இன்டா் மிலன் 4-0 என விக்டோரியா பிளஸெனையும் (குரூப் சி), போா்டோ 4-0 என கிளப் புருஜ்ஜையும் (குரூப் பி), எய்ன்ட்ராசட் ஃப்ராங்க்ஃபா்ட் 2-1 என மாா்சிலேவையும் (குரூப் டி), லிவா்பூல் 3-0 என அஜாக்ஸையும் (குரூப் ஏ), நபோலி 3-0 என ரேஞ்ஜா்ஸையும் (குரூப் ஏ) தோற்கடித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com