இரண்டு ஆட்டங்களை வைத்து ராகுலை நீக்க முடியாது: இந்திய பேட்டிங் பயிற்சியாளர் 

இந்திய தொடக்க பேட்டர் ராகுலின் மோசமான இரண்டு ஆட்டங்களை வைத்து அவரை அணியிலிருந்து நீக்க முடியாதென பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

இந்திய தொடக்க பேட்டர் ராகுலின் மோசமான இரண்டு ஆட்டங்களை வைத்து அவரை அணியிலிருந்து நீக்க முடியாதென பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார். 

நாளை (ஞாயிற்றுக் கிழமை) தென்னாப்பிரிக்காவுடன் இந்தியா விளையாட உள்ளது. தொடக்க பேட்டர் கே.எல்.ராகுல் மோசமாக விளையாடி வருகிறார். பாகிஸ்தானுடன் 2 ரன்களுக்கும், நெதர்லாந்துடன் 9 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார். அவரைக் குறித்து இந்திய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறியதாவது: 

ராகுலுக்கு பதிலாக (ராகுலுக்கு பதில் ரிஷப் பந்த்) யாரையும் மாற்றம் செய்ய விரும்பவில்லை. அவர் நன்றாகத்தான் விளையாடி வருகிறார். பயிற்சி ஆட்டங்களில் சிறப்பாகவே விளையாடினார். இரண்டு ஆட்டங்கள் வைத்து மதிப்பிட முடியாது. அது மிகவும் குறைவான பரிசோதனையாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com