மேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பாகிஸ்தான் கேப்டன் மீது வாசிம் அக்ரம் அதிருப்தி!

அணியின் நலனுக்காக நடு வரிசையில் பேட்டிங் செய்ய பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் மறுத்து விட்டதாக முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

News image
Updated On :29 அக்டோபர் 2022, 3:47 pm IST

அணியின் நலனுக்காக நடு வரிசையில் பேட்டிங் செய்ய பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் மறுத்து விட்டதாக முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிராகத் தோற்ற பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பைப் போட்டியில் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக ஏற்பட்ட தோல்விகளால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறுவது மேலும் கடினமாகியுள்ளது. மீதமுள்ள 3 ஆட்டங்களிலும் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணி பற்றி முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறியதாவது:

கடந்த ஒரு வருடமாக பாகிஸ்தானின் நடு வரிசை பலவீனமாக உள்ளதை அறிவோம். நான் கேப்டனாக இருந்திருந்தால் சோயிப் மாலிக்கைத் தேர்வு செய்திருப்பேன். அவர் இல்லாவிட்டால் அணிக்குத் தலைமை தாங்க மாட்டேன் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரிடம் கூறியிருப்பேன். பாபர் ஆஸம் இன்னும் கூர்மையுடன் செயல்பட வேண்டும். இது ஆஸ்திரேலியா. ஷார்ஜாவோ பாகிஸ்தானோ இல்லை. கராச்சி கிங்ஸ் அணியில் பாபர் ஆஸமுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். நாங்கள் சரியாக விளையாடாதபோது 3-ம் நிலை வீரராக விளையாட வேண்டும் என பாபரிடம் கோரிக்கை விடுத்தேன். ஆனால் முடியாது என அவர் மறுத்து விட்டார். ஷர்ஜீலை அப்படி விளையாடச் சொல்லுங்கள் என்று கூறிவிட்டார். அணிக்காக இதுபோன்ற சிறிய விஷயங்களை ஒரு கேப்டன் செய்ய வேண்டும். உங்களுடைய கேப்டன் ரன்கள் எடுத்து மற்றவர்களை தன்னுடைய இடத்தில் விளையாட வைத்தால், அணிக்காக தியாகம் செய்ய இருக்கிறார் என்பதை நாம் உணர்வோம். இதைத்தான் பாபர் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

Related Article

எளிதான கேட்சை நழுவ விட்ட இலங்கை: சதமடித்த நியூசி. வீரர் பிலிப்ஸ்!

'பந்தின் வேகத்தினை பயன்படுத்தி விளையாடினாலே போதும்...’ - விராட் கோலி கூறும் பேட்டிங் ரகசியம்!

அடடே!: மழை பாதிப்பில்லாமல் தொடங்கிய டி20 உலகக் கோப்பை ஆட்டம்!

ராஜிநாமா செய்ய மாட்டேன்: மே.இ. தீவுகள் கேப்டன்

டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானால் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.