திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

பாகிஸ்தான் கேப்டன் மீது வாசிம் அக்ரம் அதிருப்தி!

அணியின் நலனுக்காக நடு வரிசையில் பேட்டிங் செய்ய பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் மறுத்து விட்டதாக முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 4:11 pm IST

அணியின் நலனுக்காக நடு வரிசையில் பேட்டிங் செய்ய பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் மறுத்து விட்டதாக முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிராகத் தோற்ற பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பைப் போட்டியில் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக ஏற்பட்ட தோல்விகளால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறுவது மேலும் கடினமாகியுள்ளது. மீதமுள்ள 3 ஆட்டங்களிலும் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணி பற்றி முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறியதாவது:

கடந்த ஒரு வருடமாக பாகிஸ்தானின் நடு வரிசை பலவீனமாக உள்ளதை அறிவோம். நான் கேப்டனாக இருந்திருந்தால் சோயிப் மாலிக்கைத் தேர்வு செய்திருப்பேன். அவர் இல்லாவிட்டால் அணிக்குத் தலைமை தாங்க மாட்டேன் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரிடம் கூறியிருப்பேன். பாபர் ஆஸம் இன்னும் கூர்மையுடன் செயல்பட வேண்டும். இது ஆஸ்திரேலியா. ஷார்ஜாவோ பாகிஸ்தானோ இல்லை. கராச்சி கிங்ஸ் அணியில் பாபர் ஆஸமுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். நாங்கள் சரியாக விளையாடாதபோது 3-ம் நிலை வீரராக விளையாட வேண்டும் என பாபரிடம் கோரிக்கை விடுத்தேன். ஆனால் முடியாது என அவர் மறுத்து விட்டார். ஷர்ஜீலை அப்படி விளையாடச் சொல்லுங்கள் என்று கூறிவிட்டார். அணிக்காக இதுபோன்ற சிறிய விஷயங்களை ஒரு கேப்டன் செய்ய வேண்டும். உங்களுடைய கேப்டன் ரன்கள் எடுத்து மற்றவர்களை தன்னுடைய இடத்தில் விளையாட வைத்தால், அணிக்காக தியாகம் செய்ய இருக்கிறார் என்பதை நாம் உணர்வோம். இதைத்தான் பாபர் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

Related Article

எளிதான கேட்சை நழுவ விட்ட இலங்கை: சதமடித்த நியூசி. வீரர் பிலிப்ஸ்!

'பந்தின் வேகத்தினை பயன்படுத்தி விளையாடினாலே போதும்...’ - விராட் கோலி கூறும் பேட்டிங் ரகசியம்!

அடடே!: மழை பாதிப்பில்லாமல் தொடங்கிய டி20 உலகக் கோப்பை ஆட்டம்!

ராஜிநாமா செய்ய மாட்டேன்: மே.இ. தீவுகள் கேப்டன்

டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானால் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.