ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் இன்றையப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி துபை சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
இரு அணிகளும் ஆசியக் கோப்பையின் முதல் போட்டியில் மோதியிருந்தன. அந்தப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்நிலையில், இரு அணிகளும் இன்று மீண்டும் மோதுவதால், இன்றையப் போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்தப் போட்டியில் இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, ரவி பிஷ்னாய் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.