பென் ஸ்டோக்ஸ் அடுத்த ஆஷஸ் தொடரை வெல்வார்: மைக்கேல் வாகன் 

பென் ஸ்டோக்ஸ் அடுத்த ஆஷஸ் தொடரை வெல்வார்: மைக்கேல் வாகன் 

அடுத்த ஆஷஸ் தொடரினை பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து  அணி நிச்சயமாக வெல்லும் என முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். 

அடுத்த ஆஷஸ் தொடரினை பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து  அணி நிச்சயமாக வெல்லும் என முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். 

இதுவரை நடைபெற்ற 72 ஆஷஸ் தொடர்களில் 34-ல் ஆஸ்திரேலியாவும் 32-ல் இங்கிலாந்தும் வென்றுள்ளன. 6 தொடர்கள் சமனில் முடிந்துள்ளன. 2017-18 ஆஷஸ் தொடரை வென்று 2019 தொடரை சமன் செய்தது ஆஸ்திரேலிய அணி. 2021ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியிலும் 4-0 என ஆஸி. அணி வென்று ஆஷஸ் கோப்பை தன்வசம் வைத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.  

முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன் கூறியதாவது:

ஏப்ரல் மாதத்தில் இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரை வெல்லும் என்று சொல்ல முடியவில்லை. ஆனால் கோடைக்கால டெஸ்ட் போட்டிக்குப் பிறகு இந்த முடிவு தெளிவானது. அடுத்த கோடைக்கால ஆஷஸ் தொடரில் சிறப்பாக செயல்படும். 

ஆஸ்திரேலியா நிச்சயமாக இங்கிலாந்தின் அதிரடிக்கு மரியாதை கொடுத்தே தீரும். இங்கிலாந்து அணி எந்த இடத்திலும் அதிரடியாக விளையாடக்கூடியது. கடைசி தொடரில் 4-0 மாதிரி இந்தமுறை ஆகாது. இந்த முறை நிச்சயமாக சிறப்பான கிரிக்கெட்டாக அமையும். 

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசுகிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் இனிமேல் இங்கிலாந்து பயப்படப்போவதில்லை. மெக்குல்லம் - ஸ்டோக்ஸ் தலைமையிலான அணி அழுத்தமில்லாமல் அதிரடியாக விளையாடும் போக்கினை அணியில் பழக்கப்படுத்தி இருக்கின்றனர். எல்லா அணிகளும் இந்த மாதிரி அதிரடியாக விளையாட வேண்டுமென நினைக்கிறேன். ஆனால் இங்கிலாந்து மாதிரி யாரும் விளையாட மாட்டார்கள். கடைசி கோடைக் காலத்தில் இங்கிலாந்து எப்படி டெஸ்ட் போடியை விளையாட வேண்டுமென உலகத்திற்கே தெரிவித்தது. அடுத்த ஆஷஸ் கோப்பையை நிச்சயமாக பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அணி வெல்லும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com