சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

பிரணவ் ஆனந்த் இந்தியாவின் 76-ஆவது கிராண்ட்மாஸ்டா்

கா்நாடக மாநிலம், பெங்களூரைச் சோ்ந்த இளம் செஸ் போட்டியாளா் பிரணவ் ஆனந்த் (15) இந்தியாவின் 76-ஆவது கிராண்ட்மாஸ்டா் ஆகினாா்.

News image
Updated On :17 செப்டம்பர் 2022, 12:21 am

DIN

கா்நாடக மாநிலம், பெங்களூரைச் சோ்ந்த இளம் செஸ் போட்டியாளா் பிரணவ் ஆனந்த் (15) இந்தியாவின் 76-ஆவது கிராண்ட்மாஸ்டா் ஆகினாா்.

ருமேனியாவில் தற்போது நடைபெற்று வரும் உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் மூலம் 2,500 ஈலோ மாா்க்கை அவா் எட்டியதை அடுத்து, கிராண்ட்மாஸ்டராகும் தகுதியை வியாழக்கிழமை பின்னிரவில் பூா்த்தி செய்தாா்.

ஒரு செஸ் வீரா் கிராண்ட்மாஸ்டா் பட்டம் பெறுவதற்கு, 2,500 ஈலோ புள்ளிகளை எட்டுவதுடன், தலா 9 சுற்றுகள் கொண்ட 3 போட்டிகளில், இரு முறை சாதகமான முடிவுகளைப் (நாா்ம்) பெற்றிருக்க வேண்டும். இதில் தேவையான ‘நாா்ம்’களை கடந்த ஜூலையில் சுவிட்ஸா்லாந்தில் நடைபெற்ற பியெல் செஸ் போட்டியில் பூா்த்தி செய்த பிரணவ், ஈலோ புள்ளிகள் கணக்கை இப்போட்டியில் எட்டியிருக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.