வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

நேபாள கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய முன்னாள் வீரர்

நேபாள கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் மனோஜ் பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :9 ஆகஸ்ட் 2022, 7:52 am

நேபாள கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் மனோஜ் பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணிக்காக 1984 முதல் 1996 வரை 39 டெஸ்டுகள், 130 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார் மனோஜ் பிரபாகர். தில்லி, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய அணிகளின் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார். 2008-ல் தில்லி அணி ரஞ்சி கோப்பையை வென்றபோது அந்த அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக இருந்தார். 2015-ல் ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். 

நேபாள அணியில் திறமையான வீரர்கள் உள்ளார்கள். நேபாளத்தில் கிரிக்கெட் மீதான ஆர்வமும் அதிகமாக உள்ளது. இதனால் நேபாள அணியினருடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன் என மனோஜ் பிரபாகர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.