ஆமிர் கான் நடித்து நேற்று வெளியான லால்சிங் சத்தா படத்துக்கு இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மான்டி பனேசர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் படத்துக்குப் பிறகு ஆமிர் கான் நடித்துள்ள படம் - லால் சிங் சத்தா. ஆறு ஆஸ்கர் விருதுகளை வென்ற ஹாலிவுட் படமான ஃபாரஸ்ட் கம்பின் ரீமேக் இது.
இந்தப் படத்தில் ஆமிர் கானின் ஜோடியாக கரீனா கபூர் நடித்துள்ளார். இருவரும் இதற்கு முன்பு த்ரீ இடியட்ஸ், தலாஸ் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்கள். சீக்ரெட் சூப்பர்ஸ்டார் படத்தை இயக்கிய அத்வைத் சந்தன் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா. நேற்று (ஆகஸ்ட் 11) இப்படம் வெளியானது.
இந்நிலையில் இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி கிரிக்கெட் வீரரான மான்டி பனேசர், இப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் கூறியதாவது:
அமெரிக்க ராணுவத்துக்கு ஃபாரஸ்ட் கம்ப் படம் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் வியட்நாம் போரின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகக் குறைந்த நுண்ணறிவு கொண்ட வீரர்களை அமெரிக்கா தேர்வு செய்தது. இந்தப் படம் இந்திய ராணுவ வீரர்களுக்கும் சீக்கியர்களுக்கும் அவமரியாதை செய்துள்ளது. இழிவானது என்கிற ட்வீட்டை வெளியிட்டு அதன் கூடவே, #லால் சிங் சத்தா படத்தைத் தவிர்க்கவும் என்கிற ஹாஷ்டேக்கையும் பயன்படுத்தியுள்ளார். மற்றொரு ட்வீட்டில், ஆமிர் கான் அறிவற்றவராக லால் சிங் சத்தா படத்தில் நடித்துள்ளார். ஃபாரஸ்ட் கம்ப் படமே அறிவில்லாதது தான் என்று தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
40 வயது மான்டி பனேசர், இங்கிலாந்து அணிக்காக 2006 முதல் 2013 வரை 50 டெஸ்டுகள், 1 டி20, 26 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரொனால்டோ இரட்டை கோல்: 5-0 கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது போர்ச்சுகல்!

மத்திய அரசுத் துறைகளில் வேலை: எழுத்துத் தேர்வுக்கு 26-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

நைஜீரியாவில் ஆயுதக் குழு தாக்குதல்

வட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



