டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

ஒரே ஓவரில் 22 ரன்களை அடித்த புஜாரா! (விடியோ) 

இந்தியாவின் பிரபல டெஸ்ட் கிரிக்கெட் வீரர் புஜாரா ஒரே ஓவரில் 22 ரன்களை அடித்தது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

News image

கோப்புப் படம்

Updated On :13 ஆகஸ்ட் 2022, 12:38 pm IST

இந்தியாவின் பிரபல டெஸ்ட் கிரிக்கெட் வீரர் புஜாரா ஒரே ஓவரில் 22 ரன்களை அடித்தது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

34வயதான இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா டெஸ்ட் போட்டிகளில் மிகவும் பிரபலமானவர். ராகுல் திராவிட்டுக்குப் பிறகு பொறுமையாக விளையாடும் வீரரென புகழ்பெற்றவர். இவர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உள்ளூர் போட்டிகளில் சசெக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 

இதில் லியாம் நார்வெல் வீசிய 45வது ஓவரில் புஜாரா அசத்தலாக விளையாடி 22 ரன்களை குவித்தார். 50லிருந்த்து 100 ரன்களை வெறும் 22 பந்துகளில் கட்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 67 பந்துகளில் 100 ரன்களை எடுத்து அசத்தினார். இதனை கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடிவருகின்றனர்.  

டெஸ்டில் மட்டுமே கவனம் செலுத்து வந்த புஜாரா வெள்ளை பந்து போட்டிகளில் விளையாடுவதில்லை. இவர் ஒருநாள் போட்டியில் இறுதியாக 2014 இல் விளையாடினார். இதுவரை 5 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.