ஆசியக் கோப்பை டி20 போட்டிக்கான தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆசியக் கோப்பைப் போட்டியை 1984 முதல் நடத்தி வருகிறது. 50 ஓவர், டி20 என இரு வகைகளிலும் இப்போட்டி நடைபெறும். இந்திய அணி ஆசியக் கோப்பை ஏழு முறை வென்றுள்ளது.
2022 ஆசியக் கோப்பைப் போட்டி இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக இலங்கைக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 போட்டி நடைபெறுகிறது. ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறவுள்ள போட்டியில் ஆகஸ்ட் 28 அன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்தியா, பாகிஸ்தான், தகுதிச்சுற்று அணி என மூன்று அணிகள் குரூப் ஏ பிரிவிலும் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் குரூப் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. இரு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோதவுள்ளன. சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், செப்டம்பர் 11 அன்று துபையில் நடைபெறும் இறுதிச்சுற்றில் மோதுகின்றன. அனைத்து ஆட்டங்களும் இந்திய நேரம் இரவு 7.30 மணிக்குத் தொடங்குகின்றன.
இந்நிலையில் ஆசியக் கோப்பை டி20 போட்டி - ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி, டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி-யில் ஒளிபரப்பாகிறது. இப்போட்டிக்கான வர்ணனையாளர்களின் பெயர்களை ட்விட்டரில் அறிவித்துள்ளது ஸ்டார் நிறுவனம்.
ஆங்கில வர்ணனையாளர்களாக ஸ்காட் ஸ்டைரிஸ், சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ரவி சாஸ்திரி, கெளதம் கம்பீர், இர்ஃபான் பதான், வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ், அர்னால்ட், அதர் அலி கான், தீப் தாஸ்குப்தா ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.
Related Article
வங்கதேச கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தமிழக முன்னாள் வீரர் நியமனம்
இந்தியச் சுற்றுப்பயணம்: நியூசிலாந்து ஏ அணி அறிவிப்பு
கால்பந்து உலகக் கோப்பை: டிக்கெட் விற்பனை அமோகம்
தெ.ஆ. சிஎஸ்கே அணியில் மொயீன் அலி விளையாடவில்லையா?: புதிய குழப்பம்!
நிபுணர்கள் பாராட்டு: பிரபல செஸ் வீரரை வீழ்த்தி பிரக்ஞானந்தா முன்னிலை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடிகா் சிவகுமாா் வாசகா்களுடன் சந்திப்பு!

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

கோபி கோட்டப் பொறியாளரைக் கண்டித்து சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

கோபியில் வருவாய் தீா்வாயம் நிறைவு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



