வங்கதேச கிரிக்கெட் அணியின் வெள்ளைப் பந்து ஆட்டங்களுக்கான பயிற்சியாளராக தமிழக முன்னாள் வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீராம், இந்திய அணிக்காக 2000 முதல் 2004 வரை 8 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடந்த ஆறு வருடங்களாக ஆஸி. அணியில் சுழற்பந்து வீச்சுப் பயிற்சியாளராகவும் உதவிப் பயிற்சியாளராகவும் பணியாற்றினார். சமீபத்தில் அப்பதவியிலிருந்து அவர் விலகினார். ஆஸி. அணியில் ஸ்ரீராம் பணியாற்றிய காலக்கட்டத்தில் ஆடம் ஸாம்பா, அஷ்டன் அகர் ஆகியோர் திறமையான சுழற்பந்துவீச்சாளர்களாகப் புகழ் பெற்றார்கள். மேக்ஸ்வெல், டி20 ஆட்டங்களில் பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதிலும் ஸ்ரீராமின் பங்களிப்பு உண்டு. ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் குழுவில் உள்ளார்.
இந்நிலையில் வங்கதேச அணியின் வெள்ளைப் பந்து ஆட்டங்களுக்கான பயிற்சியாளராக ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் தொடங்கவுள்ள ஆசியக் கோப்பை டி20 போட்டி, டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆகிய முக்கியமான போட்டிகளில் வங்கதேச அணியின் பயிற்சியாளராக அவர் செயல்படவுள்ளார்.
டி20 உலகக் கோப்பை வரை ஸ்ரீராமைப் பயிற்சியாளராக நாங்கள் நியமித்துள்ளோம் என வங்கதேச கிரிக்கெட் வாரியத்தைச் சேர்ந்த இயக்குநர் ஒருவர் இத்தகவலை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ரஸ்ஸல் டொமினிகோ, வங்கதேச டெஸ்ட் ஆட்டங்களுக்கான பயிற்சியாளராகத் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Article
இந்தியச் சுற்றுப்பயணம்: நியூசிலாந்து ஏ அணி அறிவிப்பு
கால்பந்து உலகக் கோப்பை: டிக்கெட் விற்பனை அமோகம்
தெ.ஆ. சிஎஸ்கே அணியில் மொயீன் அலி விளையாடவில்லையா?: புதிய குழப்பம்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் தென்னாப்பிரிக்கா ஆதிக்கம் (ஹைலைட்ஸ் விடியோ)
நிபுணர்கள் பாராட்டு: பிரபல செஸ் வீரரை வீழ்த்தி பிரக்ஞானந்தா முன்னிலை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாத்தான்குளத்தில் பெண்களுக்கு தையல் பயிற்சி நிறைவு

நாசரேத் பள்ளியில் இரு பெரும் விழா

கோவில்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்

விதிகள் மீறி இயக்கப்பட்டதாக கனிமம் ஏற்றிச் சென்ற லாரிகள் சிறைபிடிப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



