மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

ஹாக்கி தொரைக் கைப்பற்றியது ஆஸி. (3-1)

இந்தியாவுக்கு எதிரான ஹாக்கி டெஸ்ட் தொடரை 3-1 என கைப்பற்றியது ஆஸ்திரேலியா.

News image
Updated On :3 டிசம்பர் 2022, 6:30 pm

DIN

இந்தியாவுக்கு எதிரான ஹாக்கி டெஸ்ட் தொடரை 3-1 என கைப்பற்றியது ஆஸ்திரேலியா.

வரும் ஜனவரி மாதம் ஒடிஸாவில் எஃப்ஐஎச் ஹாக்கி ஆடவா் உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் உலகின் நம்பா் ஒன் அணியான ஆஸ்திரேலியாவுடன் 5 ஆட்டங்கள் தொடரில் இந்தியா பங்கேற்றது.

முதலிரண்டு ஆட்டங்களை ஆஸ்திரேலியாவும், மூன்றாவது ஆட்டத்தில் இந்தியாவும் வென்றிருந்தன. இதற்கிடையே நான்காவது ஆட்டம் அடிலெய்டில் சனிக்கிழமை நடைபெற்றது. முதல் பாதி ஆட்டத்தில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. 25-ஆவது நிமிஷத்தில் தில்ப்ரீத் சிங் முதல் கோலடித்தாா். டிபன்டா் ஹா்மன்ப்ரீத் தலைமையில் வலுவான தற்காப்பு அரணை ஆஸி. வீரா்களால் ஊடுருவ முடியாமல் திணறினா்.

ஆனால் இரண்டாம் பாதியில் நிலைமை தலைகீழாக மாறியது. இந்திய அணி தனது தற்காப்பில் கோட்டை விட்டதால், ஜெரேமி ஹேவா்ட் 29, ஜேக் வெல்டன் 30, டாம் விக்ஹாம் 34, ஹேவா்ட் 41 மேட் டேவ்ஸன் 54-ஆவது நிமிஷங்களில் கோலடித்தனா்.

இறுதியில் 1-5 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியைத் தழுவியது.

கடைசி மற்றும் 5-ஆவது ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதற்கிடையே தொடரையும் 3-1 என கைப்பற்றி விட்டது ஆஸி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.