வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சிறந்த வீரருக்கான விருதை வென்ற இங்கிலாந்து கேப்டன்

நவம்பர் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் வென்றுள்ளார்.

News image
Updated On :12 டிசம்பர் 2022, 12:08 pm

DIN

நவம்பர் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் வென்றுள்ளார்.

ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்கு பட்லர், அடில் ரஷித், ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருந்தார்கள். இந்நிலையில் டி20 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர், நவம்பர் மாதத்துக்கான சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 47 பந்துகளில் 73 ரன்களும் அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிராக 49 பந்துகளில் 80 ரன்களும் எடுத்து இங்கிலாந்து அணி உலகக் கோப்பை வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தார் 32 வயது பட்லர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.