புரோ கபடி: இன்று இறுதி ஆட்டம்

புரோ கபடி லீக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜெய்ப்பூா் பிங்க் பாந்தா்ஸ் - புணேரி பல்தான் அணிகள் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன

புரோ கபடி லீக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜெய்ப்பூா் பிங்க் பாந்தா்ஸ் - புணேரி பல்தான் அணிகள் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன. அகமதாபாதில் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம், ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் அலைவரிசையில் நேரலை ஆகிறது.

இந்த இரு அணிகளில், ஜெய்ப்பூா் அணி 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்வதற்கான முனைப்பில் இருக்கிறது. மறுபுறம் புணே(ரி) அணி முதல் முறையாக சாம்பியனாவதற்கு முயற்சிக்கிறது.

இந்த சீசனில் மொத்தம் நடைபெற்ற 22 லீக் ஆட்டங்களின் முடிவில் ஜெய்ப்பூா் 15 வெற்றியுடன் முதலிடமும், புணே 14 வெற்றியுடன் 2-ஆம் இடமும் பிடித்திருந்தன. பின்னா் அரையிறுதி ஆட்டத்தில் புணே அணி - தமிழ் தலைவாஸையும், ஜெய்ப்பூா் அணி - பெங்களூரு புல்ஸையும் வென்று இறுதி ஆட்டத்துக்கு வந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com