ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இந்திய மகளிர் அணிக்குப் புதிய துணை கேப்டன்

இந்திய மகளிர் அணியின் துணை கேப்டனாக தீப்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

News image
தீப்தி சர்மா
Updated On :22 பிப்ரவரி 2022, 6:46 am

DIN

இந்திய மகளிர் அணியின் துணை கேப்டனாக தீப்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டி20, 5 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது இந்திய மகளிர் அணி. டி20 ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. முதல் ஒருநாள் ஆட்டத்தை 62 ரன்கள் வித்தியாசத்திலும் 3 விக்கெட் வித்தியாசத்தில் 2-வது ஒருநாள் ஆட்டத்தையும் வென்றது நியூசிலாந்து அணி. 3-வது ஒருநாள் ஆட்டத்தை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து அணி. 

இன்று நடைபெற்ற 4-வது ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூசிலாந்து. 4-வது ஒருநாள் ஆட்டம் குயின்ஸ்டவுனில் இன்று நடைபெற்றது. மழை காரணமாக ஆட்டம் 20 ஓவர்களாகக் குறைக்கப்பட்டன. டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. இந்திய அணி, 17.5 ஓவர்களில் 128 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் 5 மாற்றங்கள் செய்யப்பட்டன. மந்தனா இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்தார். மேக்னா, ஹர்மன்ப்ரீத் கெளர், டானியா பாட்டியா, ஜுலான் கோஸ்வாமி, ஏக்தா பிஸ்ட் ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் இடம்பெறவில்லை. 

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் துணை கேப்டனாக உள்ளவர் ஹர்மன்ப்ரீத் கெளர். இன்றைய ஆட்டத்தில் அவர் விளையாடாததால் இத்தொடரின் 4 மற்றும் 5-வது ஒருநாள் ஆட்டங்களில் இந்திய அணியின் புதிய துணை கேப்டனாக தீப்தி சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். 

இந்திய டி20 அணியில் ஸ்மிருதி மந்தனா, துணை கேப்டனாக உள்ளார். 2021-ல் ஹர்மன்ப்ரீத் கெளர் விளையாடாதபோது ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட், ஒருநாள் தொடருக்கு மந்தனா, துணை கேப்டனாகப் பணியாற்றினார். இன்றைய ஆட்டத்தில் மந்தனா இடம்பெற்றபோதும் தீப்தி சர்மாவுக்குத் துணை கேப்டன் பதவி அளிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.