தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

இந்திய மகளிர் அணிக்குப் புதிய துணை கேப்டன்

இந்திய மகளிர் அணியின் துணை கேப்டனாக தீப்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

News image

தீப்தி சர்மா

Updated On :22 பிப்ரவரி 2022, 12:16 pm IST

இந்திய மகளிர் அணியின் துணை கேப்டனாக தீப்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டி20, 5 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது இந்திய மகளிர் அணி. டி20 ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. முதல் ஒருநாள் ஆட்டத்தை 62 ரன்கள் வித்தியாசத்திலும் 3 விக்கெட் வித்தியாசத்தில் 2-வது ஒருநாள் ஆட்டத்தையும் வென்றது நியூசிலாந்து அணி. 3-வது ஒருநாள் ஆட்டத்தை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து அணி. 

இன்று நடைபெற்ற 4-வது ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூசிலாந்து. 4-வது ஒருநாள் ஆட்டம் குயின்ஸ்டவுனில் இன்று நடைபெற்றது. மழை காரணமாக ஆட்டம் 20 ஓவர்களாகக் குறைக்கப்பட்டன. டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. இந்திய அணி, 17.5 ஓவர்களில் 128 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் 5 மாற்றங்கள் செய்யப்பட்டன. மந்தனா இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்தார். மேக்னா, ஹர்மன்ப்ரீத் கெளர், டானியா பாட்டியா, ஜுலான் கோஸ்வாமி, ஏக்தா பிஸ்ட் ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் இடம்பெறவில்லை. 

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் துணை கேப்டனாக உள்ளவர் ஹர்மன்ப்ரீத் கெளர். இன்றைய ஆட்டத்தில் அவர் விளையாடாததால் இத்தொடரின் 4 மற்றும் 5-வது ஒருநாள் ஆட்டங்களில் இந்திய அணியின் புதிய துணை கேப்டனாக தீப்தி சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். 

இந்திய டி20 அணியில் ஸ்மிருதி மந்தனா, துணை கேப்டனாக உள்ளார். 2021-ல் ஹர்மன்ப்ரீத் கெளர் விளையாடாதபோது ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட், ஒருநாள் தொடருக்கு மந்தனா, துணை கேப்டனாகப் பணியாற்றினார். இன்றைய ஆட்டத்தில் மந்தனா இடம்பெற்றபோதும் தீப்தி சர்மாவுக்குத் துணை கேப்டன் பதவி அளிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.