சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

ஹிஸ்புல்லாவுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்: இஸ்ரேல்

ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

News image

தெற்கு லெபனானில் சேதமடைந்த கட்டிடம் ஒன்றில் ஏற்றப்பட்ட இஸ்ரேலியக் கொடி.

Updated On :5 ஜூலை 2026, 10:03 pm IST

தெற்கு லெபனானில் உள்ள பியூஃபோர்ட் கோட்டையைச் சுற்றி இஸ்ரேலியப் படைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என ராணுவத் தலைவர் தெரிவித்துள்ளார்.

"லெபனானில் இருந்து பயங்கரவாத அமைப்புகளை அகற்றும் நடவடிக்கைகளில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தொடர்ந்து ஈடுபடும். போர்நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டால் தாக்குதல் நடவடிக்கைகளை மேலும் அதிகரிப்போம்.

இஸ்ரேல் மக்களுக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் எந்த அச்சுறுத்தலும் உடனடியாகத் தாக்கி அழிக்கப்படும்" என்று ராணுவப் படைத் தலைவர் எயால் ஜமீர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேல் ராணுவத்தினர் தெற்கு லெபனானில் உள்ள பழமை வாய்ந்த கோட்டைகளைக் கைப்பற்றியுள்ளனர். அங்கு கைப்பற்றப்பட்ட பியூஃபோர்ட் கோட்டையில் சுரங்கப்பாதை ஒன்று கண்டறியப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதன்மூலம், ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பினர் இஸ்ரேலைத் தாக்குவதற்கு உதவிகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

1982-ல் லெபனான் மீதான படையெடுப்பில், கோட்டையின் சுரங்கப்பாதைகளில் மறைந்திருந்த பாலஸ்தீனப் போராளிகளுடன் நடந்த போரைத் தொடர்ந்து இஸ்ரேல் இந்தக் கோட்டையை ஏற்கனவே கைப்பற்றியிருந்தது. பின்னர், 2000-ல் இஸ்ரேலியப் படைகள் அங்கிருந்து வெளியேறும் வரை, இஸ்ரேல் அதை முக்கிய கண்காணிப்பு பகுதியாக வைத்திருந்தது.

ஈரானின் உச்சத் தலைவர் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் விதமாக மார்ச் 2 அன்று இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா அமைப்பினர், லெபனானை அந்தப் போருக்குள் இழுத்தனர். இதனைத் தொடர்ந்து, அவர்களை அழிக்கும் நோக்கில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி லெபனானில் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றது.

Summary

Israel has stated that operations against Hezbollah will continue

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.