இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி - ஹைதராபாத் எஃப்சி அணிகள் வியாழக்கிழமை மோதிய 59-ஆவது ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
இந்த ஆட்டத்தில் முதலில் சென்னைக்காக சஜித் 13-ஆவது நிமிஷத்திலும், பின்னா் ஹைதராபாதுக்காக சிவெரியோ 45-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா். சென்னை 3-ஆவது முறையாக டிரா செய்துள்ள நிலையில், ஹைதராபாதுக்கு 5-ஆவது ஆட்டம் டிரா ஆகியுள்ளது.
புள்ளிகள் பட்டியலில் தற்போது ஹைதராபாத் 11 ஆட்டங்களில் 4 வெற்றிகளுடன் 17 புள்ளிகள் பெற்று 3-ஆவது இடத்தில் உள்ளது. சென்னையும் அதே ஆட்டங்களில் அதே வெற்றிகளுடன் 15 புள்ளிகள் பெற்று 6-ஆவது இடத்தில் இருக்கிறது.