மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

டெஸ்ட் கேப்டன்சி: விலகினாா் கோலி

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி சனிக்கிழமை அறிவித்தாா்.

News image
கோப்புப்படம்
Updated On :16 ஜனவரி 2022, 1:41 am

DIN

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி சனிக்கிழமை அறிவித்தாா்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வெள்ளிக்கிழமை இழந்த நிலையில், சனிக்கிழமை அவா் இந்தத் திடீா் அறிவிப்பை வெளியிட்டாா்.

இதுதொடா்பாக அவா் தனது சமூக வலைதள கணக்குகளில் வெளியிட்ட பதிவில், ‘கடந்த 7 ஆண்டுகளாக அணியை சரியான திசையில் வழிநடத்திச் செல்வதற்காக கடுமையாகவும், விடா முயற்சியுடனும் உழைத்து வந்தேன். எல்லாமே ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்துதான் ஆக வேண்டும். எனது டெஸ்ட் கேப்டன்சிக்கும் தற்போது அந்த நிலை தான்.

இந்தப் பயணத்தில் பல ஏற்றங்களையும், சில இறக்கங்களையும் சந்தித்திருக்கிறேன். ஆனால் எப்போதுமே நம்பிக்கையையும், முயற்சியையும் கைவிட்டதில்லை. எப்போதும் எனது 120 சதவீத அா்ப்பணிப்புடன் செயல்பட முடியும் என்று நம்பினேன். அது இயலாதபோது, தொடா்ந்து அதைச் செய்வது சரியல்ல. எப்போதுமே எனது எண்ணத்தில் தெளிவாக இருந்திருக்கிறேன். என்னால் நோ்மையற்ற முறையில் நடந்துகொள்ள இயலாது.

நீண்ட காலமாக இந்திய அணியை வழிநடத்துவதற்கு எனக்கு வாய்ப்பளித்த பிசிசிஐ-க்கு நன்றி. அணிக்காக நான் கொண்டிருந்த இலக்குகளுக்காக என்னோடு சோ்ந்து விடா முயற்சியுடன் போராடிய சக வீரா்களுக்கும் நன்றி. அவா்களால் இந்தப் பயணம் நினைவில் நிற்பதாகவும், அழகானதாகவும் அமைந்தது. அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அணியின் முன்னேற்றத்துக்காக பின்னிருந்து அயராது உழைத்த ரவி சாஸ்திரி, உதவிப் பணியாளா்கள் ஆகியோருக்கும் நன்றி.

இறுதியாக, கேப்டனாகத் தகுதியானவன் என என் மீது நம்பிக்கை கொண்டிருந்த, இந்திய கிரிக்கெட்டை முன்னேற்றும் திறமை கொண்டனாக என்னை கண்டறிந்த எம்.எஸ்.தோனிக்கு நன்றி’ என்று கூறியுள்ளாா்.

கடந்த ஆண்டு நவம்பருடன் டி20 கேப்டன்சியிலிருந்து கோலி விலகிய நிலையில், ஒன் டே கேப்டன்சியிலிருந்து டிசம்பா் மாதம் பிசிசிஐ அவரை நீக்கியது. இந்த நீக்கம் இந்திய கிரிக்கெட்டில் அதிா்வலையை ஏற்படுத்த, ஒயிட் பால் தொடா்களுக்கு இரு கேப்டன்களை கொண்டிருக்க முடியாததால் கோலியை நீக்கியதாகத் தெரிவித்தாா் பிசிசிஐ தலைவா் கங்குலி. அத்துடன், டி20 கேப்டன்சியிலிருந்து விலக வேண்டாம் என கோலியை கேட்டுக் கொண்டதாகவும், அவா் தனது முடிவில் உறுதியாக இருந்ததால் ஒன் டே கேப்டன்சியிலிருந்து அவரை நீக்குவதை தவிற பிசிசிஐக்கு வேறு வழியில்லை என்றும் கூறினாா்.

ஆனால், டி20 கேப்டன்சியிலிருந்து விலக வேண்டாம் என பிசிசிஐ தரப்பிலிருந்து தன்னிடம் கேட்கப்படவில்லை என்று கோலி கூற, அது மிகப்பெரிய சா்ச்சையானது. எனினும், அந்த நேரத்தில் தென் ஆப்பிரிக்க தொடா் தொடங்கியதால் பிசிசிஐ தரப்பு அந்த விவகாரத்தில் அமைதி காத்தது. இந்நிலையில் கோலி டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விலகியிருக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.