எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மற்றொரு இலங்கை வீரர் ஓய்வு அறிவிப்பு

உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

News image
இலங்கை அணி (கோப்புப் படம்)
Updated On :26 ஜனவரி 2022, 8:19 am

DIN

இலங்கை வீரர் தில்ருவன் பெரேரா ஓய்வு அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.

39 வயது சுழற்பந்து வீச்சாளர் பெரேரா, 2007 முதல் 2021 வரை இலங்கை அணிக்காக 43 டெஸ்டுகள், 13 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 161 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 5 விக்கெட்டுகளை 8 முறை எடுத்துள்ளார். 

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தில்ருவன் பெரேரா ஓய்வு பெற்றுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. எனினும் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

30 வயது இலங்கை வீரர் பனுகா ராஜபட்ச சமீபத்தில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். பிறகு, ஓய்வு அறிவிப்பைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். எனினும் ஆஸ்திரேலிய செல்லும் இலங்கை டி20 அணியில் அவர் பெயர் இடம்பெறவில்லை. அதேபோல 30 வயது இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா டெஸ்ட் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து ஓய்வு பெறும் வீரர்கள் மூன்று மாதங்களுக்கு முன்பு தகவல் அளிக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. தற்போது, தில்ருவன் பெரேராவின் ஓய்வு குறித்த தகவலை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.