100 மீ. ஓட்டப் பந்தயத்தில் தங்கம்: சாதித்த 94 வயது சிங்கப்பெண்! (படங்கள்)
ஃபின்லாந்தில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் 94 வயது பஹ்வானி தேவி தாகர் தங்கம் வென்றுள்ளார்.
100 மீ. ஓட்டத்தை 24.74 விநாடிகளில் கடந்து அவர் தங்கம் வென்றார். மேலும் குண்டு எறிதல், வட்டு எறிதல் போட்டிகளில் அவர் வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளார். பஹ்வானி தேவி, ஹரியாணாவைச் சேர்ந்தவர்.
35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடகளப் போட்டியாக உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
94 வயதில் தங்கம் வென்ற பஹ்வானி தேவிக்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள். ஃபின்லாந்திலிருந்து தில்லி திரும்பிய பஹ்வானி தேவிக்கு விமான நிலையத்தில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
Related Article
உலகக் கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் கனடாவை வீழ்த்திய இந்திய மகளிர் அணி
சேனா நாடுகளில் இந்திய அணி ஜெயிக்குமா?
ஐபிஎல்-லில் மட்டும் ஓய்வில்லாமல் விளையாடுவது எப்படி?: இந்திய வீரர்களைச் சாடும் கவாஸ்கர்
குஜராத்தில் நடந்த போலி ஐபிஎல்: யூடியூப் வழியாக ஏமாற்றியது எப்படி?
ஆக்ரோஷமாக விளையாடிய இந்திய அணி: ஆச்சர்யப்பட்ட இங்கிலாந்து பயிற்சியாளர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

