புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஐபிஎல் 2022: பிரபல இங்கிலாந்து வீரர் விலகல்

குஜராத் டைட்டன்ஸ் அணியைச் சேர்ந்த பிரபல இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

News image
Updated On :1 மார்ச் 2022, 5:50 am

DIN

குஜராத் டைட்டன்ஸ் அணியைச் சேர்ந்த பிரபல இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ஜேசன் ராயை ரூ. 2 கோடிக்குத் தேர்வு செய்தது புதிய ஐபிஎல் அணியான குஜராத் டைட்டன்ஸ். 31 வயது ஜேசன் ராய், சமீபத்தில் முடிவடைந்த பி.எஸ்.எல். டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் ஒருவராக இருந்தார். 6 ஆட்டங்களில் விளையாடி ஒரு சதம், இரு அரை சதங்கள் உள்பட 303 ரன்கள் எடுத்தார். 

2020-ம் ஆண்டு தில்லி அணி, ஜேசன் ராயை ரூ. 1.50 கோடிக்குத் தேர்வு செய்தது. எனினும் தனிப்பட்ட காரணங்களுக்காக அப்போது ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடவில்லை. தற்போது, கரோனா பாதுகாப்பு வளையத்தில் நீண்ட நாள் இருப்பது சிரமம் என்பதால் இம்முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார். 

31 வயது ஜேசன் ராய் இங்கிலாந்து அணிக்காக 5 டெஸ்டுகள், 98 ஒருநாள், 58 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.