திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

சூரத்தில் பயிற்சியைத் தொடங்கிய சிஎஸ்கே அணி (விடியோ)

சிஎஸ்கே வீரர்கள் 5 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு சூரத்தில் பயிற்சியைத் தொடங்கியுள்ளார்கள்...

News image
Updated On :8 மார்ச் 2022, 6:27 am

DIN

சூரத்தில் ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியைத் தொடங்கியுள்ளார்கள் சிஎஸ்கே வீரர்கள்.

ஐபிஎல் 2022 போட்டி மார்ச் 26-ல் தொடங்கி மே 29 அன்று நிறைவுபெறவுள்ளது. 70 லீக் ஆட்டங்கள் மஹாராஷ்டிர மாநிலத்தின் மும்பை, புணேவில் நடைபெறவுள்ளன. 10 அணிகளும் தலா 14 ஆட்டங்களில் விளையாடவுள்ளன. 10 அணிகளும் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் 5 அணிகளுடன் இருமுறையும் மீதமுள்ள 4 அணிகளுடன் ஒருமுறையும் விளையாடவுள்ளன. குரூப் ஏ-வில் மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், தில்லி, லக்னெள ஆகிய அணிகளும் குரூப் பி-வில் சென்னை, சன்ரைசர்ஸ், ஆர்சிபி, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. சிஎஸ்கே அணி - மும்பை, சன்ரைசர்ஸ், ஆர்சிபி, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகளுடன் இருமுறையும் மீதமுள்ள 4 அணிகளுடன் ஒருமுறையும் லீக் சுற்றில் விளையாடவுள்ளது. (2022 ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைந்துள்ளன.)

YouTube video thumbnail

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் சிஎஸ்கே வீரர்கள் ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியைத் தொடங்கியுள்ளார்கள். மும்பைக்கும் சூரத்துக்கும் சுமார் 275 கி.மீ. என்பதால் அங்கிருந்து விரைவாகச் செல்வதற்கும் வசதியாக இருக்கும். மேலும் மஹாராஷ்டிரத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளதால் அதே சூழல் சூரத்திலும் உள்ளதாலும் இந்நகரில் சிஎஸ்கே வீரர்கள் பயிற்சி மேற்கொள்கிறார்கள். சென்னை ஆடுகளங்களுக்கும் மும்பை, புணே ஆடுகளங்களுக்கும் வேறுபாடுகள் உள்ளதால் மும்பை ஆடுகளத்தின் தன்மையைக் கொண்ட சூரத் ஆடுகளங்களில் சிஎஸ்கே வீரர்கள் பயிற்சி மேற்கொள்வது பொருத்தமாக இருக்கும் என்கிற முக்கியக் காரணத்துக்காகவும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

அவரவர் ஊர்களிலிருந்து வந்துள்ள சிஎஸ்கே வீரர்கள் 5 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு சூரத்தில் பயிற்சியைத் தொடங்கியுள்ளார்கள். இதுகுறித்த படங்கள், விடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது. தோனி, ராயுடு, கே.எம். ஆசிஃப், பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜி ஆகியோர் பயிற்சியில் பங்கேற்றுள்ளார்கள். மார்ச் 12 அன்று சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் சூரத்துக்கு வருகை தரவுள்ளார். 

மார்ச் 26 அன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் சிஎஸ்கேவும் கொல்கத்தாவும் மோதுகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.