ஸ்விஸ் ஓபன் பாட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவில் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
செயின்ட் ஜேக்கப்ஷேல் நகரில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையா் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்துவும், தாய்லாந்தின் புசானன் ஒங்பாம்ருங்பானும் மோதினர்.
இதையும் படிக்க- மேற்கு வங்க வன்முறையில் 21 பேர் குற்றவாளிகள்: சிபிஐ அறிக்கை
சுமார் 49 நிமிடங்கள் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 21-16, 21-8 என்ற நேர் செட் கணக்கில் புசானனை வீழ்த்தி சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். இந்த சீசனில் சிந்து வெல்லும் இரண்டாவது பட்டம் இதுவாகும்.
முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் சையது மோடி சர்வதேச பாட்மின்டன் பட்டத்தை சிந்து வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.