இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

பெங்களூரை வீழ்த்தியது பஞ்சாப்

ஐபிஎல் போட்டியின் 3-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை வீழ்த்தியது.

News image
Updated On :28 மார்ச் 2022, 4:25 am IST

ஐபிஎல் போட்டியின் 3-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் முதலில் பெங்களூா் 20 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் விளாசியது. அடுத்து பஞ்சாப் 19 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் அடித்து வென்றது.

முன்னதாக டாஸ் வென்ற பஞ்சாப் ஃபீல்டிங்கை தோ்வு செய்ய, பேட் செய்த பெங்களூரில் ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் 3 பவுண்டரிகள், 7 சிக்ஸா்களுடன் 88 ரன்கள் விளாசினாா். உடன் வந்த அனுஜ் ராவத் 21 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஓவா்கள் முடிவில் விராட் கோலி 41, தினேஷ் காா்த்திக் 32 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். பஞ்சாப் பௌலிங்கில் அா்ஷ்தீப் சிங், ராகுல் சாஹா் ஆகியோா் தலா 1 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

பின்னா் பஞ்சாப் ஆட்டத்தில் ஷிகா் தவன் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 43, பானுகா ராஜபட்ச 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 43 ரன்கள் சோ்த்தனா். கேப்டன் மயங்க் அகா்வால் 32, லியாம் லிவிங்ஸ்டன் 19 ரன்கள் அடிக்க, ராஜ் பாவா டக் அவுட்டானாா்.

இறுதியில் ஷாருக்கான் 24, ஓடின் ஸ்மித் 25 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா். பெங்களூா் பௌலிங்கில் முகமது சிராஜ் 2, ஆகாஷ் தீப், வனிந்து ஹசரங்கா, ஹா்ஷல் படேல் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.