கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

அறிமுகமாகும் மகளிர் யு-19 டி20 உலகக் கோப்பை: ஐசிசி அறிவிப்பு

மகளிர் பிரிவிலும் யு-19 உலகக் கோப்பைப் போட்டியை அறிமுகப்படுத்தவுள்ளது ஐசிசி.

News image

இந்திய இளம் வீராங்கனை ஷெஃபாலி வர்மா

Updated On :29 மார்ச் 2022, 4:19 pm IST

ஆடவர் யு-19 உலகக் கோப்பைப் போட்டிகளைப் போல மகளிர் பிரிவிலும் யு-19 உலகக் கோப்பைப் போட்டியை அறிமுகப்படுத்தவுள்ளது ஐசிசி.

இதுகுறித்த அறிவிப்பை ஐசிசி தலைமைச் செயல் அதிகாரி ஜெஃப் ஆலர்டைஸ் இன்று வெளியிட்டுள்ளார். மகளிர் கிரிக்கெட்டில் இதுவரை 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பைப் போட்டிகள் நடத்தப்பட்டதில்லை. முதல்முதலில் யு-19 உலகக் கோப்பைப் போட்டியை டி20 கிரிக்கெட் வடிவத்தில் நடத்த ஐசிசி முன்வந்திருப்பதால் பல புதிய திறமைகளைக் கண்டெடுக்க இப்போட்டி உதவும் என அறியப்படுகிறது. 

2023 மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு, யு-19 டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. எங்கு நடைபெறும் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஐசிசி கூட்டத்தில் இதுபற்றி இன்னும் ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும் என ஆலர்டைஸ் அறிவித்துள்ளார். மேலும் மகளிர் கிரிக்கெட்டில் 2024 முதல் 2027 வரையிலான போட்டிகளை யார் நடத்துவது என்பது குறித்து ஜூலை மாதம் முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.