முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

2903: இதற்கும் சேவாக்குக்கும் என்ன தொடர்பு?

மார்ச் 29. என் வாழ்க்கையின் முக்கியமான நாள்.

News image
Updated On :29 மார்ச் 2022, 3:15 pm IST

இந்திய முன்னாள் வீரர் சேவாக் இரு முச்சதங்கள் அடித்துள்ளார். 

இரு முச்சதங்களுக்கும் மார்ச் 29 என்கிற தேதியுடன் தொடர்பு உண்டு. 

2004-ல் முல்தானில் பாகிஸ்தானுக்கு எதிராக 309 ரன்களுடன் முச்சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்கிற சாதனையைப் படைத்தார் சேவாக். 

மார்ச் 29 சேவாக்கை விடுவதாக இல்லை. 

2008-ல் சென்னையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மீண்டும் முச்சதம் அடித்து (மார்ச் 28) சேவாக். அடுத்த நாள் இதே மார்ச் 29 அன்று 319 ரன்களுடன் ஆட்டமிழந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்கிற சாதனை இன்னமும் சேவாக் வசமே உள்ளது. டான் பிராட்மேன், பிரையன் லாரா, கிறிஸ் கெயில், சேவாக் என நால்வர் மட்டுமே முச்சதத்தை இருமுறை அடித்துள்ளார்கள். 

மார்ச் 29, முச்சதங்கள் பற்றி ட்விட்டரில் சேவாக் கூறியதாவது:

மார்ச் 29. என் வாழ்க்கையின் முக்கியமான நாள். இந்தத் தேதியில் முல்தானில் பாகிஸ்தானுக்கு எதிராக என்னுடைய முதல் முச்சதத்தை அடித்தேன். இதே தேதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 319 எடுத்து ஆட்டமிழந்தேன். தற்செயலாக என் காருக்கு 2903 என்கிற எண் அமைந்தது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.