விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

2903: இதற்கும் சேவாக்குக்கும் என்ன தொடர்பு?

மார்ச் 29. என் வாழ்க்கையின் முக்கியமான நாள்.

News image
Updated On :29 மார்ச் 2022, 3:15 pm IST

இந்திய முன்னாள் வீரர் சேவாக் இரு முச்சதங்கள் அடித்துள்ளார். 

இரு முச்சதங்களுக்கும் மார்ச் 29 என்கிற தேதியுடன் தொடர்பு உண்டு. 

2004-ல் முல்தானில் பாகிஸ்தானுக்கு எதிராக 309 ரன்களுடன் முச்சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்கிற சாதனையைப் படைத்தார் சேவாக். 

மார்ச் 29 சேவாக்கை விடுவதாக இல்லை. 

2008-ல் சென்னையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மீண்டும் முச்சதம் அடித்து (மார்ச் 28) சேவாக். அடுத்த நாள் இதே மார்ச் 29 அன்று 319 ரன்களுடன் ஆட்டமிழந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்கிற சாதனை இன்னமும் சேவாக் வசமே உள்ளது. டான் பிராட்மேன், பிரையன் லாரா, கிறிஸ் கெயில், சேவாக் என நால்வர் மட்டுமே முச்சதத்தை இருமுறை அடித்துள்ளார்கள். 

மார்ச் 29, முச்சதங்கள் பற்றி ட்விட்டரில் சேவாக் கூறியதாவது:

மார்ச் 29. என் வாழ்க்கையின் முக்கியமான நாள். இந்தத் தேதியில் முல்தானில் பாகிஸ்தானுக்கு எதிராக என்னுடைய முதல் முச்சதத்தை அடித்தேன். இதே தேதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 319 எடுத்து ஆட்டமிழந்தேன். தற்செயலாக என் காருக்கு 2903 என்கிற எண் அமைந்தது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.