இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளார்.
2022 அபுதாபி டி20 கிரிக்கெட் லீக் போட்டியில் டெக்கன் கிளாடியேட்டர்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் ரெய்னா முதல்முறையாகப் பங்கேற்கிறார். டெக்கன் கிளாடியேட்டர்ஸ் அணியில் ரஸ்ஸல், நிகோலஸ் பூரன் போன்ற வீரர்களும் உள்ளார்கள். நவம்பர் 23 முதல் அபு தாபியில் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 8 அணிகள் கலந்துகொள்ளும் போட்டியின் இறுதிச்சுற்று டிசம்பர் 4 அன்று நடைபெறவுள்ளது. 2017 முதல் டி10 லீக் போட்டி நடைபெற்று வருகிறது.
2020-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ரெய்னா ஓய்வு பெற்றார். இந்த வருடம் ஐபிஎல் உள்ளிட்ட இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாடும் தகுதியை அடைந்தார். 2021-ல் ஐபிஎல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றபோது அந்த அணியில் ரெய்னாவும் இடம்பெற்றிருந்தார்.
35 வயது ரெய்னா, 2005 முதல் 2018 வரை இந்திய அணிக்காக 18 டெஸ்டுகள், 226 ஒருநாள், 78 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டியில் 205 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். அவற்றில் பெரும்பாலான ஆட்டங்கள் சிஎஸ்கே அணிக்காக விளையாடியவை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


