டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு இந்திய அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இன்று முதல் (நவம்பர் 18) தொடங்கிய டி20 தொடர் நவம்பர் 22 அன்று முடிவடைகிறது. டி20 தொடருக்கு பாண்டியா தலைமையிலான இந்திய அணியும் ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணியும் பங்கேற்கின்றன.
ரோஹித் சர்மா, கோலி, ராகுல் ஆகியோருக்கு இத்தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் ரிஷப் பந்த் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அணியில் இடம்பெற்ற 8 வீரர்கள் டி20 தொடரில் இடம்பெற்றுள்ளார்கள். வெலிங்டனில் இன்று நடைபெறவிருந்த முதல் டி20 ஆட்டம் மழையால் கைவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய அணி வெளிநாடுகளில் விளையாடிய டி20 ஆட்டங்களில் முதல்முறையாக டாஸ் நிகழ்வு கூட நடைபெறாமல் ஓர் ஆட்டம் கைவிடப்பட்டது இன்றுதான். இதற்கு முன்பு இந்தியாவில் 4 டி20 ஆட்டங்கள் இதுபோல டாஸ் நிகழ்வு கூட நடைபெறாமல் கைவிடப்பட்டுள்ளன.
இந்திய ஆடவர் டி20: டாஸ் நிகழ்வு கூட நடைபெறாமல் கைவிடப்பட்ட ஆட்டங்கள்
v நியூசிலாந்து, விசாகப்பட்டினம், 2012
v தெ.ஆ., கொல்கத்தா, 2015
v ஆஸ்திரேலியா, ஹைதராபாத், 2017
v தென்னாப்பிரிக்கா, தர்மசாலா, 2019
v நியூசிலாந்து, வெலிங்டன், 2022.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறையில் கைதிகள் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

புதுப்புது வடிவங்களில் வெளியிடும் மொழித் திணிப்பு சுற்றறிக்கையை சிபிஎஸ்இ திரும்பப் பெறுக: தமிழச்சி தங்கபாண்டியன்
நான் எங்கும் ஓடி ஒளியவில்லை: செந்தில் பாலாஜி கடிதம்!







