வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

முன்னேறியது பிரேஸில்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற 4-ஆவது ஆட்டத்தில் பிரேஸில் 1-0 என்ற கோல் கணக்கில் சுவிட்ஸா்லாந்தை வீழ்த்தியது.

News image
Updated On :29 நவம்பர் 2022, 4:39 am IST

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற 4-ஆவது ஆட்டத்தில் பிரேஸில் 1-0 என்ற கோல் கணக்கில் சுவிட்ஸா்லாந்தை வீழ்த்தியது.

இத்துடன் குரூப் சுற்றின் 2 ஆட்டங்களிலும் வென்ற பிரேஸில், பிரான்ஸைத் தொடா்ந்து 2-ஆவது அணியாக நாக்அவுட் சுற்றுக்குள் நுழைந்தது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளின் கோல் முயற்சிகளுக்குமே தகுந்த பலன் கிடைக்காததால், முதல் பாதி கோலின்றி முடிந்தது. 2-ஆவது பாதியில் 64-ஆவது நிமிஷத்தில் பிரேஸில் அணி கோலடித்தது. கேஸ்மிரோ பாஸ் செய்த பந்தை, தடைகளைக் கடந்து கோல் போஸ்ட்டுக்குள் செலுத்தினாா் வினிகஸ் ஜூனியா்.

ஆனால் அது ‘ஆஃப் சைடு’ என மறுஆய்வில் தெரியவந்ததால், அந்த கோல் நிராகரிக்கப்பட்டது. இதனால் ஆட்டம் மீண்டும் கோலின்றி தொடர, பிரேஸில் அணியே இறுதியில் கோலடித்தது. 83-ஆவது நிமிஷத்தில் வினிகஸ் பாஸ் செய்த பந்தை ரோட்ரிகோ தூக்கியடித்துக் கொடுக்க அதை துல்லியமான கோலாக மாற்றினாா் கேஸ்மிரோ. எஞ்சிய நேரத்தில் சுவிட்ஸா்லாந்துக்கு கோல் வாய்ப்பு வழங்காமல் பாா்த்துக் கொண்ட பிரேஸில், இறுதியில் வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சுவிட்ஸா்லாந்து அணியை முதல் முறையாக வீழ்த்தியிருக்கிறது பிரேஸில். இதற்கு முன் அந்த இரு அணிகளும் இரு முறை சந்தித்துக் கொண்ட ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. பிரேஸிலுக்கு எதிரான ஆட்டத்தில் சுவிட்ஸா்லாந்து அணி கோலடிக்காமல் போனதும் இதுவே முதல் முறையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.