கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

மரியாதை என்பது வெற்றி, தோல்வியை வைத்து வருவதல்ல: அஸ்வின் பதிலடி!

எதிரணிக்குத் தரப்படும் மரியாதை, வெற்றி - தோல்வியை வைத்து வருவதல்ல என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின்...

Published On :

எதிரணிக்குத் தரப்படும் மரியாதை, வெற்றி - தோல்வியை வைத்து வருவதல்ல என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரமீஸ் ராஜாவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரமீஸ் ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் தோற்கடித்தது. இதன்பிறகு பாகிஸ்தானை இந்திய அணி மரியாதையுடன் அணுகுவதாகப் பேட்டியளித்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரமீஸ் ராஜா. 

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்ததாவது:

ரமீஸ் ராஜா அவ்வாறு சொன்னாரா என எனக்குத் தெரியாது. இது ஒரு கிரிக்கெட் ஆட்டம். நாங்கள் அடிக்கடி பாகிஸ்தானுடன் விளையாடுவதில்லை. இரு அணிகளுக்கும் இடையில் போட்டி மனப்பான்மை பெரிதாக உள்ளது. இரு அணிகளும் மோதும் ஆட்டம் என்பது இரு நாட்டு ரசிகர்களுக்கும் முக்கியமானதாகும். கிரிக்கெட்டில் வெற்றியும் தோல்வியும் ஓர் அங்கம் என்பதை ஒரு கிரிக்கெட் வீரர் புரிந்துகொள்வார். டி20 கிரிக்கெட்டில் வெற்றி வித்தியாசம் நூலிழையில் தான் இருக்கும். எதிரணி மீதான மரியாதை என்பது அவர்களுக்கு எதிரான வெற்றி, தோல்வியை வைத்து வருவதல்ல. நீங்கள் எப்படி ஓர் அணியாக உருவாகியிருக்கிறீர்கள் என்பதை வைத்தே மதிப்பிடப்படும். நாங்கள் நிச்சயமாக பாகிஸ்தான் அணியை மதிக்கிறோம். அவர்களும் எங்களை மரியாதையாக நடத்துகிறார்கள் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.