கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

ஐசிசி சிறந்த வீராங்கனை விருதை வென்ற இந்திய கேப்டன்!

செப்டம்பர் மாதத்துக்கான ஐசிசி சிறந்த வீராங்கனையாக இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Published On :

செப்டம்பர் மாதத்துக்கான ஐசிசி சிறந்த வீராங்கனையாக இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறந்த வீராங்கனையாகத் தேர்வானார் ஹர்மன்ப்ரீத். ஒருநாள் தொடரில் 3 ஆட்டங்களில் 221 ரன்களை எடுத்தார். 1999-க்குப் பிறகு இங்கிலாந்தில் முதல்முறையாக ஒருநாள் தொடரை வென்றது இந்திய மகளிர் அணி. இதையடுத்து செப்டம்பர் மாதத்துக்கான ஐசிசி சிறந்த வீராங்கனையாக ஹர்மன்ப்ரீத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருதைப் பெறும் முதல் இந்திய வீராங்கனை என்கிற பெருமையையும் அவர் அடைந்துள்ளார். சக வீராங்கனை மந்தனா, வங்கதேச வீராங்கனை நிகர் சுல்தானை ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்த விருதை வென்றுள்ளார். 

33 வயது ஹர்மன்ப்ரீத் கெளர், இந்திய அணிக்காக 3 டெஸ்டுகள், 124 ஒருநாள், 135 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.