கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

முத்தரப்பு டி20: பாகிஸ்தானை எளிதாக வீழ்த்திய நியூசிலாந்து

முத்தரப்பு டி20 போட்டியில் பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தியுள்ளது நியூசிலாந்து அணி.

Published On :

முத்தரப்பு டி20 போட்டியில் பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தியுள்ளது நியூசிலாந்து அணி.

கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தானால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஒருவராலும் 30 ரன்களை எடுக்க முடியாத அளவுக்குச் சிறப்பாகப் பந்துவீசினார்கள் சுழற்பந்து வீச்சாளர்களான சான்ட்னர், பிரேஸ்வெல், இஷ் சோதி ஆகியோர். சான்ட்னர், பிரேஸ்வெல், செளதி ஆகிய மூவரும் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். ரிஸ்வான் 16, பாபர் ஆஸம் 21 ரன்கள் மட்டும் எடுத்தார்கள். எளிதான இலக்கை 16.1 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி. ஃபின் ஆலன் 42 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 62 ரன்கள் எடுத்தார். கான்வே 49, வில்லியம்சன் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 

இந்த வெற்றியினால் 3 ஆட்டங்களில் 2 வெற்றியுடன் அதிக ரன்ரேட்டுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது நியூசிலாந்து அணி. 2 வெற்றிகளுடன் 2-ம் இடத்தில் உள்ளது பாகிஸ்தான். வங்கதேச அணி மீதமுள்ள இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிச்சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பு உருவாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.