ஜிம்பாப்வேவுக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்துள்ளது.
கடந்த திங்களன்று ஸ்காட்லாந்துக்கு எதிராகத் தோற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி அடுத்த ஆட்டத்தில் ஜிம்பாப்வேவை எதிர்கொள்கிறது. முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை வென்ற ஜிம்பாப்வே அணி, இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பு பிரகாசமாகி விடும்.
டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. உடல்நலக்குறைவு காரணமாக ஜிம்பாப்வே கேப்டன் கிரைக் எர்வின் இந்த ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. ரெஜிஸ் சகாப்வா கேப்டனாகச் செயல்படுகிறார்.
9-வது ஓவரின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் என நல்ல நிலைமையில் இருந்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி. அதன்பிறகு தான் ஆட்டம் வேறு பாதையில் சென்றது. 13, 14-வது ஓவர்களில் ஒரேடியாக 4 விக்கெட்டுகளை இழந்தது. நன்கு விளையாடி வந்த ஜான்சன் சார்லஸ் 45 ரன்களில் ரன் அவுட் ஆனதால் நிலைமை இன்னும் மோசமானது. கேப்டன் நிகோலஸ் பூரன் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜிம்பாப்வேவின் சிகந்தர் ராஸா 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கடைசி இரு ஓவர்களில் 26 ரன்கள் எடுத்ததால் ஓரளவு கெளரவமான ஸ்கோரைப் பெற்றது மேற்கிந்தியத் தீவுகள் அணி. 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. கடைசிக்கட்டத்தில் ரோவ்மன் பவல் 28 ரன்களும் அகேல் ஹுசைன் ஆட்டமிழக்காமல் 23 ரன்களும் எடுத்து உதவினார்கள்.
கைவிடப்பட்ட இந்தியாவின் 2-வது பயிற்சி ஆட்டம்!
கர்டிஸ் கேம்பரின் மறக்க முடியாத அதிரடி ஆட்டம்: ஸ்காட்லாந்தை வீழ்த்திய அயர்லாந்து!
மழையால் பாதிக்கப்படுமா இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்?
ஓவர்களை விரைவாக வீசி முடிக்க ஆஸி. அணி மேற்கொள்ளும் புதிய உத்தி!
சையத் முஷ்டாக் அலி: அதிக ரன்கள் எடுத்துள்ள சிஎஸ்கே வீரர்