மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு ஓய்வு பெறுவது ஏன்?: ஆஸி. கேப்டன் பிஞ்ச் விளக்கம்

உலகக் கோப்பைப் போட்டி வரை விளையாட மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தேன் என்றார். 

News image
Updated On :10 செப்டம்பர் 2022, 6:13 am


2023 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பே ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து ஆரோன் ஃபிஞ்ச் விளக்கம் அளித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய டி20, ஒருநாள் அணிகளின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் கூறியுள்ளார்.

35 வயது ஃபிஞ்ச், ஆஸி. அணிக்காக 2011 முதல் 5 டெஸ்டுகள், 145 ஒருநாள், 92 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஆஸ்திரேலிய டி20, ஒருநாள் அணிகளின் கேப்டனாகவும் உள்ளார். 

நியூசிலாந்துக்கு எதிரான ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் தொடர் நாளையுடன் முடிவடைகிறது. 2-0 என முன்னிலை பெற்று ஒருநாள் தொடரை வென்றுள்ளது ஆஸ்திரேலியா. இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள கடைசி ஒருநாள் ஆட்டத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக ஆஸி. கேப்டன் ஃபிஞ்ச் அறிவித்துள்ளார். எனினும் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன் என்று அவர் அறிவித்துள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸி. அணி சாம்பியன் பட்டம் வென்றது. 

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்த வருடம் 13 ஆட்டங்களில் விளையாடி 1 அரை சதத்துடன் 169 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் ஃபிஞ்ச். கடந்த 12 இன்னிங்ஸில் 5 முறை டக் அவுட் ஆகியுள்ளார். கடைசி 7 இன்னிங்ஸில் 26 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதன் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறியப்படுகிறது. 

2023 உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பே ஓய்வு பெறுவது ஏன் என்கிற கேள்விக்கு ஃபிஞ்ச் பதில் அளித்ததாவது:

2023 உலகக் கோப்பைப் போட்டிக்கு அடுத்த கேப்டன் தயாராவதற்கான அவகாசத்தை அளிக்க இதுவே சரியான நேரம். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்று, மெல்போர்ன் மைதானத்தில் கடைசி ஆட்டத்தை விளையாடி ஓய்வு பெற்றிருந்தாலும் நன்றாக இருந்திருக்கும். ஆனால் என் விருப்பம் மட்டுமே முக்கியமல்ல. அடுத்து யார் கேப்டன் ஆகிறாரோ யார் அடுத்த தொடக்க வீரரோ அவர்களுக்குச் சரியான வாய்ப்புகள் அளிக்கப்பட்டால் தான் 2023 உலகக் கோப்பையை வெல்ல முடியும். என்னுடைய காயங்கள் மற்றும் சமீபகாலமாக நான் விளையாடும் விதம் போன்றவற்றால் நான் உலகக் கோப்பைப் போட்டி வரை விளையாட மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தேன் என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.