கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ஜடேஜா வெளியிட்ட புகைப்படம்: ரசிகர்கள் ஆதங்கம்!

காயம் காரணமாக டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெறாத ஜடேஜா தன்னுடைய சமீபத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

News image
Updated On :15 செப்டம்பர் 2022, 3:12 pm IST

காயம் காரணமாக டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெறாத ஜடேஜா தன்னுடைய சமீபத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த மாதத் தொடக்கத்தில் காயம் காரணமாக ஆசியக் கோப்பைப் போட்டியிலிருந்து ஆல்ரவுண்டர் ஜடேஜா விலகினார். முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாகப் பிறகு அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார். இதனால் அவரால் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியிலும் இடம்பெற முடியாமல் போனது. இந்திய அணியின் முக்கிய வீரராக ஜடேஜா உள்ளதால் அவர் அணியில் இல்லாதது இந்திய அணிக்குப் பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

இந்நிலையில் தன்னுடைய வீட்டில் ஊன்றுகோலின் உதவியுடன் நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஜடேஜா. ஒவ்வொரு அடியாக எடுத்து வைப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படம் பல ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற வேண்டியவருக்கு இந்த நிலைமையா எனத் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.