டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

டி20 தொடரிலிருந்து விலகிய பும்ராவுக்குப் பதிலாக சிராஜ் தேர்வு!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகிய பும்ராவுக்குப் பதிலாக சிராஜைத் தேர்வு செய்துள்ளது பிசிசிஐ.

News image
Updated On :30 செப்டம்பர் 2022, 11:54 am IST

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகிய பும்ராவுக்குப் பதிலாக சிராஜைத் தேர்வு செய்துள்ளது பிசிசிஐ.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்றிருந்த பும்ரா, முதல் டி20 ஆட்டத்தில் இடம்பெறவில்லை. சமீபகாலமாக அவருக்குத் தொந்தரவு தரும் முதுகு வலி மீண்டும் ஏற்பட்டதையடுத்து தெ..ஆ. டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்தும் பும்ரா விலகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகிய பும்ராவுக்குப் பதிலாக சிராஜைத் தேர்வு செய்துள்ளது பிசிசிஐ. பும்ராவை பிசிசிஐ மருத்துவக் குழு கண்காணித்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டி20 தொடரின் 2-வது ஆட்டம் குவாஹாட்டியில் வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.