டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

டி20 உலகக் கோப்பை: பும்ரா விலகினால் அடுத்து என்ன நடக்கும்?

ஆறு மாத காலம் வரை ஓய்வு எடுக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் என பிசிசிஐயைச் சேர்ந்த...

News image
Updated On :29 செப்டம்பர் 2022, 4:38 pm IST

காயம் காரணமாக டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து பிரபல வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 வயது பும்ரா இந்தியாவுக்காக 30 டெஸ்டுகள், 72 ஒருநாள், 60 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். சமீபகாலமாகக் காயம், ஓய்வு போன்ற காரணங்களால் பல ஆட்டங்களில் அவர் விளையாடவில்லை.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்றிருந்த பும்ரா, முதல் டி20 ஆட்டத்தில் இடம்பெறவில்லை. இந்நிலையில் சமீபகாலமாக அவருக்குத் தொந்தரவு தரும் முதுகு வலி மீண்டும் ஏற்பட்டதையடுத்து டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து பும்ரா விலகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

காயத்தின் தீவிரத்தன்மை குறித்து அறிய பெங்களூருக்குச் சென்றுள்ளார் பும்ரா. என்.சி.ஏ.வில் மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்று அதன் முடிவுகள் வந்த பிறகு பும்ராவின் நிலை பற்றி பிசிசிஐ அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆறு மாத காலம் வரை ஓய்வு எடுக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் என பிசிசிஐயைச் சேர்ந்த ஒருவர், பிடிஐ செய்தி நிறுவனத்துக்குத் தகவல் அளித்துள்ளார். காயம் காரணமாக ஜடேஜா விலகிய நிலையில் அடுத்ததாக பும்ராவும் விலகவுள்ளதாகச் செய்தி வெளியாகியிருப்பது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. இந்திய அணி டி20 உலகக் கோப்பைப் போட்டியை வெல்ல வேண்டுமென்றால் பும்ராவின் பங்களிப்பு மிக முக்கியம் என்கிற நிலையில் அவரால் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டிருப்பது இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவைத் தரும் என ரசிகர்கள் கருதுகிறார்கள். 

பும்ரா விலகினால் அடுத்து நடக்கும்?

இந்திய அணியின் 11 பேரில் புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகிய மூவரும் பிரதான வேகப்பந்து வீச்சாளர்களாக இருப்பார்கள். பும்ரா விலகியதால் ஷமி அல்லது தீபக் சஹார் ஆகிய இருவரில் ஒருவர் 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பிடிப்பார்கள். தற்போது இருவரும் மாற்று வீரர்களாக உள்ளார்கள். பும்ராவுக்குப் பதிலாக சிராஜ் இந்திய அணியில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. அக்டோபர் 15 வரை ஐசிசியின் அனுமதியின்றி அணியில் மாற்றம் செய்துகொள்ளலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.