சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் பதுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகின்றது. மைதானம் கடந்த மாதம் புதுப்பிக்கப்பட்டு அனைத்து கேலரிகளிலும் திறக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு சென்னை மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை இரண்டு ஆட்டங்கள் விளையாடியுள்ளன. இந்த ஆட்டங்களை காண டிக்கெட் கவுண்டர்கள் மற்றும் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், சென்னை மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்திற்கான டிக்கெட்டுகளை சிஎஸ்கே நிர்வாகம் பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்தன.
இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள சிஎஸ்கே நிர்வாகம், அணியின் நிர்வாகம் தரப்பில் எந்தவொரு டிக்கெட்டும் பதுக்கப்படவில்லை என்றும், வேறு தனியார் நிர்வாகம் மூலம் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, ஏப்ரல் 21-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் ஆட்டத்திற்கான டிக்கெட் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை முதல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
மேலும், பேடிஎம் இணையதளத்திலும் ரூ. 2,000 முதல் ரூ. 5,000 வரையிலான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!!

மீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம்

சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!

மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

