டி20 தொடர் இழப்பை தவிர்க்குமா இந்திய அணி?
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.


இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி புரோவிடென்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. ஏற்கனவே மேற்கிந்தியத் தீவுகள் முதல் இரண்டு டி20 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் மேற்கிந்தியத் தீவுகள் அணி களம் காண்கிறது.
இதையும் படிக்க: பாகிஸ்தான் அணி தேர்வுக் குழு தலைவராக முன்னாள் வீரர்!
ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ள இந்திய அணி இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை இழக்காமல் இருக்கும் முனைப்போடு களம் காண்கிறது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கடந்த இரு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாதும் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தொடர்ச்சியான இரண்டு தோல்விகளால் இந்திய அணி வீரர்கள் விளையாடும் விதம் குறித்து விமர்சனங்கள் எழுந்தன.
விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்து இந்திய அணி வெற்றிப் பாதைக்கு திரும்புமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...