இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 9 போட்டிகளின் தேதிகள் மாற்றப்படுவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அட்டவணையை ஐசிசி சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், பண்டிகை நாள்கள் மற்றும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு, உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 9 போட்டிகளின் தேதிகள் மாற்றப்படுவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
அக்டோபர் 15-ல் அமதாபாத்தில் நடக்கவிருந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டி அக்.14-ல் தேதியே நடைபெறும் என்றும், இந்தியா - நெதர்லாந்து போட்டி நவ.11க்கு பதில் நவ.12 ஆம் தேதியே நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: உலக தடகள சாம்பியன்ஷிப்: 28 பேருடன் இந்திய அணி
பாகிஸ்தான் அணி ஆடவுள்ள 3 போட்டிகளின் தேதி மாற்றப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.