இரட்டை சதம் விளாசிய பிறகு பிரித்வி ஷா என்ன பேசினார் தெரியுமா?

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான பிரித்வி ஷா 153 பந்துகளில் 244 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார்.
இரட்டை சதம் விளாசிய பிறகு பிரித்வி ஷா என்ன பேசினார் தெரியுமா?

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான பிரித்வி ஷா 153 பந்துகளில் 244 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார்.

ராயல் ஒருநாள் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நேற்றைய போட்டியில் நார்த்தாம்டன் அணிக்காக விளையாடும் இந்திய அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான பிரித்வி ஷா இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். பிரித்வி ஷாவின் அதிரடியான இரட்டை சதத்தால் நார்த்தாம்டன் அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் சோமர்செட் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய பிரித்வி ஷா 153 பந்துகளில் 244 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 28 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்கள் அடங்கும். 

23 வயதாகும் பிரித்வி ஷா இந்திய அணியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இடம் பிடிக்கவில்லை. அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். அதன்பின், அவர் இதுவரை இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. தற்போது இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதிலும், பிரித்வி ஷா பெயர் இடம்பெறவில்லை. அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் அவர் சேர்க்கப்படவில்லை. 

இந்த  நிலையில், அவர் நார்த்தாம்டன் அணிக்காக இரட்டை சதம் விளாசியுள்ளது கவனம் பெற்றுள்ளது.

இரட்டை சதம் விளாசிய பிறகு பிரித்வி ஷா பேசியதாவது: நான் அனுபவத்துக்காகவே இங்கு  விளையாடுகிறேன். இந்திய அணித் தேர்வுக்குழுத் தலைவர்கள் என்ன நினைப்பார்கள் என்பது குறித்து நான் உண்மையில் சிந்திக்கவில்லை. நான் இங்கு சிறப்பாக விளையாடி எனது அனுபவத்தை வளர்த்துக் கொள்வதற்காகவே இங்கு இருக்கிறேன். நார்த்தாம்டன் அணி இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியுள்ளனர். நான் மகிழ்ச்சியுடன் விளையாடுகிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com