17 ஆண்டுகளுக்கு பிறகு மே.தீவுகளிடம் வீழ்ந்த இந்தியா!
17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியுடன் விளையாடி தொடரை கைப்பற்றி மேற்கிந்தியத் தீவுகள் சாதனை படைத்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-2 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
முன்னதாக விளையாடிய ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி இந்திய அணியே ஆதிக்கம் செலுத்திய நிலையில், டி20 தொடரை இழந்தது.
இந்நிலையில், கடந்த 2006ஆம் ஆண்டுக்கு பிறகு குறைந்தபட்சம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி இந்தியா அணியை வீழ்த்தியுள்ளது மேற்கிந்தியத் தீவுகள் அணி.
2006-ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியா-மே.தீவுகள் விளையாடிய 22 சர்வதேச கிரிக்கெட் தொடரில் இந்திய அணியே வென்றுள்ளது.
மேலும், டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி, மே.தீவுகளிடம் தோல்வியை தழுவியுள்ளது.
இதையும் படிக்க | டி20: தொடரை வென்றது மே.இ.தீவுகள்
அதுமட்டுமின்றி கடந்த 2 ஆண்டுகளில் இந்திய அணி பங்கேற்ற 12 டி20 கிரிக்கெட் தொடரில் அனைத்தையும் கைப்பற்றிய நிலையில், இந்தியாவின் வெற்றி பயணத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தது மே.தீவுகள்.