பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தானுடன் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியினை இலங்கையில் விளையாடி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 47.1 ஓவரில் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக இமாம்-உல்-ஹக் 61 ரன்கள் எடுத்தார். இப்திகார் அஹமது 30 ரன்களும் ஷதாப் கான் 39 ரன்களும் எடுத்தனர்.
இதையும் படிக்க: உலகக் கோப்பை செஸ்: டிராவில் முடிந்த முதல் சுற்று!
ஆப்கானிஸ்தான் சார்பாக முஜீப் 3 விக்கெட்டுகள் எடுத்தார். நபி, ரஷித் கான் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: 2011 உலகக்கோப்பை அணியில் ரோஹித் தேர்வாகாததற்கு காரணம் தோனி!
202 என்ற எளிமையான இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தொடக்கமே மோசமாக அமைந்தது. 3வது ஓவரில் ஷாஹீன் அஃப்ரிடி வீசிய ஓவரில் 2 விக்கெட்டுகள் விழுந்தன. 4வது, 8வது ஓவர்களில் அடுத்தடுத்த விக்கெட்டுகள் விழுந்தன. தற்போது குர்பாஜ் 14 ரன்களுடனும் மொஹமது நபி 3 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
இப்ரஹிம் ஜட்ரான், ரஹ்மது ஷா, ஷாகிதி ஆகிய மூன்று பேட்டர்களும் டக்-அவுட் ஆகியது குறிப்பிடத்தக்கது. 12 ஓவரில் ஆப்கானிஸ்தான் 29/4 ரன்கள் எடுத்திருந்தது.
பின்னர் சிறிது நேரத்திலே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஆப்கானிஸ்தான். ஹாரிஸ் ராஃப் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். ஷாஹீன் அஃப்ரிடி 2 விக்கெட்டுகளும் நசீம் ஷா, ஷதாப் கான் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
19.2 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 59 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியடைந்தது.